Saturday, December 6, 2014

Neengal Sirikka........... Tamilil Comedy

வாய்விட்டு சிரிங்க :

ஒரு மாமியார் தன் மூன்று மருமகன்களின் நல்ல குணத்தினை சோதிக்க விரும்பினார். இதற்காக முதல் நாள் தன் முதல் மருமகனுடன் நடைப்பயிற்சிக்கு சென்றார். அருகில் உள்ள ஆற்றில் குதித்தார். மருமகன் உடனடியாக குதித்து அவரைக் காப்பபாற்றினார். மறுநாள்
முதல் மருமகனின் வீட்டு வாசலில் ஒரு டொயோட்டா கரோலா புதுகார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
அடுத்த நாள் மாமியார் தன்னுடைய இரண்டாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். இரண்டாவது மருமகனும் ஆற்றில் குதித்து மாமியரை காப்பாற்றினார்.
அதற்கு அடுத்த நாள் காலை இரண்டாவது மருமகள் வீட்டு வாசலில் ஒரு புதிய டொயோட்டா கரோலா கார் நின்றிருந்தது. அதில் உங்கள் மாமியாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.
மூன்றாவது நாள் தனது மூன்றாவது மருமகனுடன் நடைப்பயிற்சி சென்றார். மீண்டும் ஆற்றில் குதித்தார். மூன்றாவது மருமகள் சிரித்து விட்டு நடந்து சென்று விட்டார். அவர் மாமியாரை காப்பாற்றவில்லை.
மறுநாள் காலை மூன்றாவது மருமகன் வீட்டு வாசலில் பிஎம்டபிள்யூ எம்5 கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் கீழே உங்கள் மாமனாரிடமிருந்து என்று எழுதப்பட்டிருந்தது.....

No comments:

Post a Comment

Your Comments are Published Very Shortly