Friday, May 29, 2015

அம்மா அப்பா - Child

வேலைக்குப் போய்
திரும்பி வந்த
தன் அம்மாவிடம்
5 வயது சிறுமி கேட்டாள் ..
Child : நம்ம வீட்டு
பீரோ சாவியை
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?
Mother : அதைப் போய்
ஆயாகிட்ட கொடுப்பாங்களா..?
Child : நம்ம வீட்டு
பீரோல இருக்குற நகை,
பணம் எல்லாம்
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?
Mother : ஷ்ஷு....
அதெல்லாம் ஆயாகிட்டக்
கொடுக்கக் கூடாது...
Child : உங்க ATM கார்டை
ஆயாகிட்ட ஏம்மா
கொடுத்துட்டுப் போகல..?
Mother : என்ன கேள்வி இது..?
நீ சொல்றதெல்லாம்
ரொம்ப முக்கியமான பொருள்.
அதையெல்லாம்
ஆயாகிட்டக் கொடுக்கக் கூடாது...
Child : "" அப்போ ஏம்மா
என்ன மட்டும்
ஆயாகிட்ட விட்டுட்டுப் போற..?
அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
நான் முக்கியமில்லையா..? ""
இம்முறை
அம்மாவிடமிருந்து
பதில் இல்லை.
கண்களில்
கண்ணீர் மட்டுமே இருந்தது...!